நரை அலங்காரி

Narai

நரை அலங்காரி

நரை அலங்காரி !! 

டீசர் 

நேரடி அமேசான் வெளியீடு

தேவா தன் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க...  கீரவாணி அதிபதியை கேளுங்க என்பது போல் பார்க்க 

தேவா

சொல்லு அதி

இல்ல உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்

என்ன பேசணும் ஏதாவது பிரச்சனையா அதி 

ப்ச் , உன்ன பத்தி தான் பேசணும் 

என்ன பத்தியா என்ன?

பெங்களூர் பக்கம் ஒரு டாக்டர் வேலை பார்க்கிறாங்க 

ஓஓஓ 

முதல் கல்யாணம் ஏதோ ஒத்துக்காம டைவர்ஸ் ஆயிடுச்சு ..

ம்ம் 

வயசு 36 நல்ல பையன் இருந்தா பாருங்கன்னு சொல்லி இருப்பாங்க போல இருக்கு..  எனக்கு உன் நியாபகம் தான் வந்தது கட்டிக்கிறியா தேவா என்றதும் அதிர்ந்து தேவா திரும்பி தன் மகளை பார்க்க சங்கோஜப்பட்டு

என்னடா அதி என்ன பேசிக்கிட்டு இருக்க மக முன்னாடி போய் 

அவளை ஏன் நீ பாக்குற தேவா,  அவள பாத்துக்க நான் இருக்கேன்...  நீ உன் வாழ்க்கையை எப்ப தான் பாக்க போற..  அந்த அகம் பிடிச்ச பொண்ணு தான் வேணும்னு இன்னும் எத்தனை காலத்துக்கு நீ இப்படியே நிக்க போற ... பேசாம அதை கல்யாணம் கட்டினதையே மறந்துடு...  இந்த பொண்ணு டாக்டர் நீயும் டாக்டர் மேட்ச் ஆகும் .. 

நீங்க இப்படி தனியா இருக்கிறதை பார்க்கும்போதெல்லாம்  கஷ்டமா இருக்கு அப்பா என்ற மகள் முன்னால் கையை நீட்டி தடுத்த தேவா..

எனக்காக கவலைப்பட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆனா,நீங்க எல்லாம் கவலைப்படுகிற அளவுக்கு நான் ஒன்னும் கஷ்டத்துல இல்ல..  தனியா இருக்கேன்னு உங்கிட்ட  நான் சொன்னேனா..  இந்த நெஞ்சுக்குள்ள 20 வருஷமா உன் அம்மாவோட நினைவுகளை பூட்டி வச்சிருக்கேன்..  அந்த நினைவுகளோட இன்னும் இளமையா வாழ்ந்துகிட்டு இருக்கேன்...  அவளுக்கு என்ன புடிக்கல,  விட்டுட்டு போயிட்டா...  அவளுக்கு புடிச்ச மாதிரி என்னால வாழ தெரியல...  தப்பு என் பக்கத்துல.. தனிச்சு கிடக்கிறது உன் அம்மாவும் தான்...  20 வருஷம் வீம்பா இருக்காளே அவளுக்கு தெரியும்...  அவளைத் தாண்டி நான் வேற யாரையும் நேசிக்க மாட்டேன்னு ...  அந்த தைரியம் தான் இன்னும் கொஞ்சம் அவ வீம்பை  ஏத்தி விடுது அவளுடைய சந்தோஷங்களைதான் கெடுத்துட்டேன் அவளோட நம்பிக்கையவாவது கடைசி வரைக்கும் காப்பாத்தணும் ... அவளை சுமந்த இந்த இதயத்துக்கு அவளைத் தவிர யாரையும் சுமக்க தெரியாது... 

சாரிப்பா என்று வாணி தகப்பனை பாவமாக பார்க்க வலியான புன்னகையை கொடுத்த தேவா ஆந்திராவில் போய் வேலையில் சேர்ந்தான்

கலம்பகம் முதலாளி உன்ன கூப்பிட்டு விட்டார் என்றதும் கலம்பகம் வியர்வையை துடைத்துக் கொண்டு முதலாளியின் அறைக்குள் போக முதலாளி சதாசிவம் சேரில் சாய்வாக அமர்ந்திருந்தார்..

அவர் மீது எப்போதும் அவளுக்கு ஒரு நல்லெண்ணம் உண்டு இ.. ன்று வரை அவள் பல தடைகளை கடந்து வர இந்த பெரிய மனிதன் தான் காரணம்

கூப்பிட்டு விட்டீங்களாமே ஐயா 

ஆமா கலம்பகம் உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே..பீடிகை வர

சொல்லுங்க ஐயா என்ன விஷயம் 

அது அது எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல

சும்மா சொல்லுங்க அய்யா , 

உனக்கே தெரியும் எனக்கு பொண்டாட்டி இறந்து பத்து வருஷம் ஆகுது..  தனிக்கட்டையா தான் இருக்கேன்

ஆமா 

கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் என்றதும் அகம்  அதிர்ந்து அவரை பார்க்க

நீ சரின்னு சொன்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... அகம்  யாரையோ ஒருத்தர கல்யாணம் கட்டிக்கிறதுக்கு உன்னை கட்டிக்கிட்டா என்றவரை பார்த்து அவளுக்கு ரத்தமும் நாடியும் துடித்தாலும் காலத்தில் அவர் செய்த நன்மைகள் சிறிதும் பெரிதுமாக பலதை வாங்கி விட்டாளே

நீங்களும் ஆம்பள தானே சொல்லாம சொல்லிட்டீங்க பரவாயில்லைய்யா நாளைல இருந்து நான் வேலைக்கு வரல ... 

நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடு 

வாழணும்னு நான் நினைச்சிருந்தா 20 வருஷத்துக்கு முன்னாடி அந்த ஆள விட்டு வந்த அப்பவே ஒரு ஆம்பளையை பிடிச்சிருக்க மாட்டேனா அவர் கூட நான் வாழல .. ஆனா இன்னவரைக்கும் நான் அவர் பொண்டாட்டியாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் எனக்கும் அவருக்கும் இடையில 1000 இல்ல லட்சம் பிரச்சனை இருக்கு ஆனா அதுக்காக அந்த மனுஷன் படுத்த நெஞ்சில் இன்னொருத்தனுக்கு இடம் கொடுப்பேன்னு கனவுல கூட நினைக்காதீங்க...

அகம் நான் சொல்றத 

அவரை தவிர யாரும் என்ன அகம்னு கூப்பிட நான் உரிமை தரல கூப்பிட்டீங்க என்று அவள் பார்த்த பார்வையில் அவர் அப்படியே அமைதியாக அமர்ந்து கொண்டார்

நான் நெருப்பு மாதிரி என்னை அணைக்க அந்த ஆளாலேயே முடியாது ...நானா அடங்கி போனா தான் உண்டு என்று போன அவளை எச்சில் விழுங்கி பார்த்தார்...

டீயை வாயில வைக்க முடியல.. ஹாஸ்பிட்டல் சுத்தம் தான் சரியில்லன்னு பார்த்தா..  கேண்டீன் அதுக்கு மேல கேவலமா இருக்கு ... இங்க என்னதான் நடந்துகிட்டு இருக்கு என்று டாக்டர் கோட்டை அணிந்து கொண்டு தேவா  வெளியே வந்தான்

இங்கே டீனாக வேலைக்கு வந்து இரண்டு வாரம் ஆகிறது இந்த இரண்டு நாளில் இங்கே உள்ள அசுத்தங்களை பார்த்து தலை வலி எடுத்து விட்டது. 

எனக்கு தெரியாது இன்னும் 24 மணி நேரத்துல இந்த கேம்பஸ் முழுக்க நீட்டா மாறி இருக்கணும் 

சரி சார்  அவன் விரும்பின தொழில் அல்லவா நேசித்து செய்கிறான்..

சாரி சார் நீங்க சொல்ற மாதிரி செஞ்சுடுகிறோம் 

கேண்டி செக் பண்ணனும் என்று வேகமாக அவன் நடைக்கு  ஈடு கொடுத்து ஊழியர்கள் பின்னால் போக...  கேண்டின் கதவை திறந்து கொண்டு தேவா உள்ளே போக..

அக்கா காசு வாங்கிட்டு தானே காபி கொடுக்கிற..  கொடுக்கிற காப்பிய சுத்த பத்தமா கொடுக்கலாம்தானே ஏன் கழுவாத கிளாஸ்ல கொடுக்கிற ...  அண்ணே நீங்க கொஞ்ச நேரம் பொறுங்க நான் கிளாஸ் எல்லாம் கழுவி எடுத்துட்டு வர சொல்றேன் என்று கேண்டின் மேனேஜராக  காப்பி கப்போடு வந்த கலம்பகம்...  வேகமாக உள்ளே வந்த தேவாவின் மீது இடித்து கையில் வைத்திருந்த காபியை அவன் மீது கொட்டி விட்டு நின்றாள் ..

அய்யோ சாரிங்க சார் என்றவள் தலையை உயர்த்த டாக்டர் கோட்டில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்போடு தேவா ஸ்மார்ட்டாக அவன் தொழிலுக்கு ஏற்ற களையில் நிற்க .. இடையில் சொருகிய சேலையில் கையில் எச்சில் கிளாஸோடு நின்றாள் கலம்பகம் .. 

தன் முன் நின்ற நரை அலங்காரியை அவன் அதிராது பார்க்க.. அவளோ  அதிர்ந்து போய் பார்த்தாள்... 

நரையிலும் காதல் அழகே !!!